புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை கண்டித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயச் சங்கங்கள் சார்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் செவ்வாயன்று (ஜூலை 9) ஒருங்கிணைப்பாளர் கீதநாதன் தலைமையில் நடைபெற்றது.